செய்திகள்
ராஜபாளையத்தில் லாரி மோதி விபத்து: பிளஸ்-1 மாணவர் பலி
ராஜபாளையத்தில் அட்டைப்பெட்டி ஏற்றி வந்த லாரி மோதியதில் பிளஸ்-1 மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சன்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அஜய்குமார் (வயது 17). சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
வீட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ்சில் அஜய்குமார் சத்திரப்பட்டி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
பழைய பஸ் நிலையம் அருகே ஊரணி பட்டி தெரு விலக்கில் அஜய்குமார் சென்றபோது, கோவையில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அட்டைப்பாரம் ஏற்றிச் சென்ற லாரி வந்தது.
அந்த லாரி எதிர்பாராத விதமாக அஜய்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பலியான மாணவர் அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்துக்கு காரணமான அம்பையைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா (40) கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சென்ற மாணவர், லாரி மோதி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் சன்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அஜய்குமார் (வயது 17). சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
வீட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ்சில் அஜய்குமார் சத்திரப்பட்டி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
பழைய பஸ் நிலையம் அருகே ஊரணி பட்டி தெரு விலக்கில் அஜய்குமார் சென்றபோது, கோவையில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அட்டைப்பாரம் ஏற்றிச் சென்ற லாரி வந்தது.
அந்த லாரி எதிர்பாராத விதமாக அஜய்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பலியான மாணவர் அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்துக்கு காரணமான அம்பையைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா (40) கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சென்ற மாணவர், லாரி மோதி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.