செய்திகள்

போராடும் ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள்-பெற்றோர்கள் மறியல்

Published On 2019-01-28 09:30 IST   |   Update On 2019-01-28 10:54:00 IST
போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோட்டில் இன்று பெற்றோர்கள் திரண்டு வந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #JactoGeo #ParentsProtest
ஈரோடு:

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. தமிழக அரசும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தது. எனினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.



இந்த நிலையில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை மும்முரம் காட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக, பணிக்கு திரும்பவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருமாள்மலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

போராடும் ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் எங்களுக்கு வேண்டாம் என்றும், வேலையில்லாமல் உள்ள பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். #JactoGeo #ParentsProtest
Tags:    

Similar News