செய்திகள்

தருமபுரி அருகே தாய்-மகள் மர்ம மரணம்

Published On 2018-12-29 16:20 GMT   |   Update On 2018-12-29 16:20 GMT
தருமபுரி அருகே வீட்டில் தாய்-மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகிறார்கள்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் குண்டலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. கிரேன் ஆபரேட்டர். இவருக்கும் கிருஷ்ணா புரம் புழுதிகரை காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி திவ்யா லட்சுமி (16), சுவேதா என்ற மகள்களும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். 

பழனி மகேஸ்வரியுடன் காட்டு கொட்டாயில் தனியாக வீடு கட்டி வாழ்ந்து வந்தார். பழனி வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுவிட்டார். சுவேதாவும், சச்சினும் வீட்டின் அருகே உள்ள தாத்தா மாதன் வீட்டிற்கு சென்றுவிட்டனர். வீட்டில் மகேஸ்வரியும், திவ்யா லட்சுமி மட்டும் இருந்தனர்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் 2 பேரும் வெளியே வராததால் மாதன் மகேஸ்வரி வீட்டின் கதவை தட்டினார். அப்போது கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது அங்கு பேத்தி திவ்யா லட்சுமி தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அதன் அருகே மகேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட மாதன் 2 பேரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மகேஸ்வரி குடும்ப தகராறு காரணமாக மகளை தீ வைத்து கொன்று விட்டு தூக்குபோட்டு கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News