செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2018-12-16 09:45 GMT   |   Update On 2018-12-16 09:45 GMT
சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து 1.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

கோவையில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் காணப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சூட்கேஸை பரிசோதனை செய்தபோது அதில் 14 தங்க கட்டிகள் இருந்தன. அதன் எடை 1.6 கிலோ ஆகும். அதன் மதிப்பு சுமார் ரூ.52.5 லட்சம்.

விமானத்தின் கழிவறையில் கவரில் தங்க கட்டிகள் இருந்ததாகவும் அதை தனது சூட்கேசில் வைத்து எடுத்து வந்ததாகவும் அந்த பயணி தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News