செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை 322 மாணவர்களுக்கு கவர்னர் பட்டம் வழங்குகிறார்

Published On 2018-11-24 10:21 GMT   |   Update On 2018-11-24 10:21 GMT
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் 322 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்குகிறார். #TNGovernor #BanwarilalPurohit
சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் 82-வது பட்டமளிப்பு விழா நாளை காலை (25-ந் தேதி) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகங்களின் வேந்தரும் தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 322 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் 45 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குகிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், மத்திய தீர்ப்பாயத்தின் தலைவருமான நரசிம்ம ரெட்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பல்கலைக் கழகத்தில் நேரடியாக படித்த 5 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் மற்றும் தொலைதூர கல்வி மூலம் படித்த 63 ஆயிரத்து 187 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.

அங்கு பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்கள்-பதக்கங்கள் வழங்குகிறார். நிகழ்ச்சியை முடித்து விட்டு சிதம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணியளவில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

கவர்னரின் வருகையையொட்டி சிதம்பரத்தில் ரெயில், பஸ் நிலையம், மேம்பாலம், பல்கலைக்கழக வளாகம், நடராஜர் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News