செய்திகள்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சபரிமலை பயணம்

Published On 2018-11-20 07:26 GMT   |   Update On 2018-11-20 07:26 GMT
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார். #PonRadhakrishnan #Sabarimala
நாகர்கோவில்:

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு திருவிழா நாட்களில் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜையையொட்டி அவர் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல திட்டமிட்டார். இதற்காக வெளியூரில் இருந்த அவர் இன்று காலையே நாகர்கோவில் வந்தார்.

இன்று அதிகாலை முதல் சபரிமலை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இன்று மாலை அவர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.

சபரிமலைக்கு நாளை காலை சென்றடையும் பொன். ராதாகிருஷ்ணன், அங்கு சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் மலை இறங்கி மீண்டும் நாகர்கோவில் வருகிறார். #PonRadhakrishnan #Sabarimala

Tags:    

Similar News