செய்திகள்
போலி டாக்டர் சுப்ரதா தாஸ்

கல்பாக்கம் அருகே போலி டாக்டர் கைது

Published On 2018-11-17 06:24 GMT   |   Update On 2018-11-17 06:24 GMT
கல்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மட்டு படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பொய்கைகரை பகுதியில் சுப்ரதா தாஸ் என்பவர் அலோபதி டாக்டர் என அடையாளப்படுத்திக் கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தார்.

சந்தேகம் அடைந்த நோயாளி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரபணி இணை இயக்குனர் ஜீவா பார்வைக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த கிளினிக் சென்று சோதணையிட்டு விசாரித்த போது சுப்ரதா தாஸ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும் அனுமதி இல்லாத மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

அவரை சதுரங்கப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

இவர் கல்பாக்கம் பகுதி வடமாநில நபர்களுக்கு போதை ஊசி மருந்துகள் ஏதேனும் கொடுத்துள்ளாரா? கல்பாக்கத்திற்கு எப்படி வந்து தங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News