செய்திகள்
குட்கா வழக்கில் கைதான அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கோர்ட்டு மறுப்பு
குட்கா வழக்கில் கைதான அதிகாரிகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #Gutkha #CBI
சென்னை:
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர்குப்தா ஆகியோர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது சட்டவிரோதமான செயலுக்கு உடந்தையாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே சி.பி.ஐ. கோர்ட்டிலும், சென்னை ஐகோர்ட்டிலும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் செந்தில்முருகன், என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Gutkha #CBI
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர்குப்தா ஆகியோர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது சட்டவிரோதமான செயலுக்கு உடந்தையாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே சி.பி.ஐ. கோர்ட்டிலும், சென்னை ஐகோர்ட்டிலும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் செந்தில்முருகன், என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Gutkha #CBI