செய்திகள்
சகாய பிரதீஷ்டன்

குளச்சல் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த என்ஜினீயர் கைது

Published On 2018-11-09 05:25 GMT   |   Update On 2018-11-09 05:25 GMT
குளச்சல் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த என்ஜினீயர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல்:

குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய பிரதீஷ்டன் (வயது 22).

சகாய பிரதீஷ்டன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மண்டைக்காடு புதூரில் இவரது வீடு அருகே இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

சகாய பிரதீஷ்டன் சென்னையில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும்போது, அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

சமீபத்தில் சகாய பிரதீஷ்டன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் அந்த பெண்ணை சந்திக்க சென்றார். அப்போது அந்த பெண் வீட்டின் குளியலறையில் இருந்து வெளியே வந்தார்.

அதனை சகாய பிரதீஷ்டன் தனது செல்போனில் படம் பிடித்து கொண்டார். பின்னர் அந்த படத்தை பெண்ணிடம் காட்டி அதனை பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண்ணை சகாய பிரதீஷ்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையே வெளிநாட்டில் இருந்த பெண்ணின் கணவர் சமீபத்தில் ஊருக்கு வந்தார். அதன்பின்பும் சகாய பிரதீஷ்டன் அடிக்கடி அந்த பெண்ணை ரகசியமாக சந்தித்து ஆசைக்கு இணங்க வலியுறுத்தினார்.

சகாய பிரதீஷ்டனின் கோரிக்கையை ஏற்க மறுத்த பெண், இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சகாய பிரதீஷ்டன், அந்த பெண்ணுடன் எடுத்து கொண்ட ஆபாச படங்களை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு சமூக வலை தளம் மூலம் அனுப்பினார். அதனை பார்த்த உறவினர்கள் மற்றும் கணவர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் பொன். கீதா ஆகியோர் புகார் மீது விசாரணை நடத்தினர்.

பின்னர் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததாக சகாய பிரதீஷ்டனை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 364 (சி), 506 (2) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News