செய்திகள்

மாணவி கொலை- என்னை கொலை செய்து விடுங்கள் என கெஞ்சும் டிரைவர்

Published On 2018-10-23 16:07 IST   |   Update On 2018-10-23 16:07:00 IST
ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவியை கொலை செய்த டிரைவர் தன்னை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.
மாணவி ராஜலட்சுமியை கொலை செய்த தினேஷ்குமாரிடம் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றப்பிரிவு, தனிப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தினேஷ்குமார் ‘என்னை கொன்று விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சினார். நான் வெளியே சென்றால் இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். ஆகவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள். தயவு செய்து கொன்று விடுங்கள் என்று கூறினார்’. அவரிடம் போலீசார், வேறு என்ன? என்ன? குற்றங்கள் செய்துள்ளாய் என கேட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News