செய்திகள்

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது- இந்து மக்கள் கட்சியினர் மறியல்

Published On 2018-10-21 13:50 GMT   |   Update On 2018-10-21 13:50 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி:

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டு கூறியது. ஆனால் பெண்களை அனுமதிப்பது அய்யப்பன் கோவிலின் ஆச்சாரவிதிகளை மீறுவதாகும் என்று இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பண்ருட்டி 4 வழி சாலை சந்திப்பில் இன்று மதியம் இந்து மக்கள் கட்சியினர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் விரைந்துசென்று மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News