செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2018-10-21 04:30 GMT   |   Update On 2018-10-21 04:30 GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.99 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.

நேற்று 20ஆயிரத்து 158 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 20ஆயிரத்து 933 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 13ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 104.47 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.99 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam

Tags:    

Similar News