செய்திகள்

டெல்லியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 6½ கிலோ தங்க கட்டி பறிமுதல்

Published On 2018-10-15 09:20 GMT   |   Update On 2018-10-15 09:20 GMT
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 6½ கிலோ தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirPort
ஆலந்தூர்:

டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் 6½ கிலோ தங்க கட்டி கேட்பாரற்று கிடந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இந்த விமானம் துபாயில் இருந்து டெல்லி வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது. எனவே துபாயில் இருந்து வந்த பயணிகள் யாரேனும் தங்கத்தை கடத்தி வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விமானத்திலேயே தங்க கட்டியை மறைத்து வைத்து தப்பி சென்று உள்ளனர்.

இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இருக்கையில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். #ChennaiAirPort
Tags:    

Similar News