செய்திகள்

மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி - இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு

Published On 2018-10-03 08:57 GMT   |   Update On 2018-10-03 08:57 GMT
மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #EdappadiPalaniswami #PaneerSelvam

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

கோவை புறநகர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதி 92-வது வட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி யூசுப் 30-ந்தேதி சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும்போது மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமுற்றோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது குடும்பத்திற்கு அ.தி.முக. சார்பில் குடும்ப நல நிதி உதவியாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News