செய்திகள்

அதிமுக அரசை கண்டித்து மயிலை மாங்கொல்லையில் கனிமொழி பேசுகிறார்

Published On 2018-09-29 07:27 GMT   |   Update On 2018-09-29 07:27 GMT
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசுகிறார். #DMK #Kanimozhi
சென்னை:

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் இன்று மாலை அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டித்து நடத்தப்படும் இந்த பொதுக் கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் த.வேலு தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகிறார்கள்.

கூட்டத்தில் கு.க.செல்வம், எம்.கே.மோகன், குமரி விஜயகுமார், எம்.டி.ஆர். நாதன், துரை, வெல்டிங் மணி, ஐ.கென்னடி, செல்வி சவுந்தரராஜன், ராணி ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பு கபாலி, ரேவதி, மலர், டில்லிராணி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இதே போல் வருகிற 1-ந்தேதி (திங்கள்) மாலை 6 மணிக்கு தி.நகர் பஸ் நிலையம் அருகே முத்துரங்கன் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகின்றனர். பகுதிச் செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, வட்டச் செயலாளர் உதயசூரியன், ஜானகிராமன், அசோக்நகர் சுப்பையா, லலிதாபுரம் துரை மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். #DMK #Kanimozhi
Tags:    

Similar News