செய்திகள்
கூட்டத்தில் துரைமுருகன் பேசிய காட்சி.

வருகிற சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு கடைசி வாய்ப்பு - துரைமுருகன் பேச்சு

Published On 2018-09-29 06:09 GMT   |   Update On 2018-09-29 12:37 GMT
வருகிற சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு என்று வேலூரில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DMK #DuraiMurugan
திருப்பத்தூர்:

ஜோலார்பேட்டையில் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

வேலூர் மேற்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க. பின்தங்கிய நிலையில் உள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம்.

இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் ஒற்றுமையுடன் செயல்பட்டு இங்குள்ள 4 தொகுதிகளையும் மீட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அண்ணா, கருணாநிதி போல ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்பார்கள், தோல்வியடைந்தால் தி.மு.க. கதை முடிந்துவிட்டது என பேசுவார்கள்.

இது வாழ்வா? சாவா? பிரச்சினை வரும் தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு கட்சிக்கு உழைக்காதவர்கள் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள்.

குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள். இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஸ்டாலினை பார்த்து பயப்படுகின்றனர்.

அ.தி.மு.க., பா.ஜனதா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொண்டு விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணா, கருணாநிதி, காமராஜர் ஆகிய 3 பேரின் முகங்களை ஸ்டாலின் வடிவில் பார்க்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆடிக்காற்றில் வந்தவர் காற்று நின்றதும் தானாக கவிழ்ந்து விடுவார் என்றார்.  #DMK #DuraiMurugan


Tags:    

Similar News