செய்திகள்

நிர்மலாதேவி மீதான வழக்கு மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்

Published On 2018-09-19 15:13 GMT   |   Update On 2018-09-19 15:13 GMT
நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாஜிஸ்திரேட்டு மாற்றி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

இந்த வழக்கு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கைதான 3 பேர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று 3 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase

Tags:    

Similar News