செய்திகள்

சேலத்தில் சாரல் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2018-09-14 04:38 GMT   |   Update On 2018-09-14 04:38 GMT
சேலத்தில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, 4 ரோடு, பொன்னம்மா பேட்டை, அம்மாபேட்டை, 5 ரோடு, குரங்குசாவடி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீர் சாரல் மழை பெய்தது. #SalemRain
சேலம்:

சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் கோடைகாலத்தை போல் வெயில் கொளுத்துகிறது. இதனால் இரவு நேரம் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சேலத்தில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, 4 ரோடு, பொன்னம்மா பேட்டை, அம்மாபேட்டை, 5 ரோடு, குரங்குசாவடி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீர் சாரல் மழை பெய்தது. பன்னீரை தெளித்ததுபோல் சாரல் மழை பெய்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றார்கள். நடைபயிற்சி சென்றவர்களும் நனைந்தவாறு சென்றார்கள்.

சிறிதுநேரம் இந்த சாரல் மழை நீடித்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலால் தவித்த பொதுமக்களுக்கு இந்த சாரல் மழை சற்று ஆறுதலை கொடுத்தது. #SalemRain
Tags:    

Similar News