செய்திகள்
வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

Published On 2018-09-08 04:19 GMT   |   Update On 2018-09-08 04:19 GMT
வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வந்தது.

இன்றும் தொடர்ந்து அதே அளவான 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த சிலநாட்களாக தொடர்ந்து 47 அடியாக வைக்கப்பட்டுள்ளது.

விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு நேற்று 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்படுகிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
Tags:    

Similar News