செய்திகள்
மாணவன் ஜீவரத்தினம்

தலைமை ஆசிரியை தாக்கியதில் மாணவனின் கை முறிந்தது - போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார்

Published On 2018-09-05 06:36 GMT   |   Update On 2018-09-05 06:36 GMT
மதுராந்தகம் அருகே தலைமை ஆசிரியை தாக்கியதில் மாணவனின் கை முறிந்ததையடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். #Studentattack
மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம். அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஜீவரத்தினம் அழுது கொண்டிருந்தான். அவனது கையில் காயம் ஏற்பட்டு இருந்தது.

இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்த போது வீட்டு பாடம் செய்யாதததால் தலைமை ஆசிரியை தாக்கியதாக மாணவன் தெரிவித்தான். அவனது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜீவரத்தினத்தை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்துள்ளனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஜீவரத்தினத்தின் பெற்றோர் தலைமை ஆசிரியர் குறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Studentattack

Tags:    

Similar News