செய்திகள்

வாலாஜா அருகே பைக் விபத்தில் 3 பேர் பலி

Published On 2018-08-24 13:47 IST   |   Update On 2018-08-24 13:47:00 IST
வாலாஜா அருகே பைக் விபத்தில் 3 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

வாலாஜா:

பாணாவரம் அடுத்த புதுபட்டு கொன்னப் பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் (30) மற்றும் வாலாஜா காமராஜ் நகரை சேர்ந்த குமார் (50) ஆகிய 3 பேரும் கூலி வேலைக்காக வாலாஜா நோக்கி இன்று காலை பைக்கில் சென்றனர்.

அப்போது எதிரே வந்து திருவண்ணாமலை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த முரளி (24). இவர் தனது நண்பர் சிவராஜன் (23) என்பவருடன் பைக்கில் வாலாஜாவிற்கு வந்து கொண்டிருந்தார். அம்மனஞ்சேரி என்ற இடத்தில் வந்த போது 2 பைக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் வெங்கடேசன், குமார் மற்றும் சிவராஜன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சிதம்பரம், முரளி படுகாயமடைந்தனர்.

வாலாஜா போலீசார் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த முரளியை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும், சிதம்பரத்தை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News