செய்திகள்
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- உதயகுமார் வீட்டை முற்றுகையிட முயற்சி- 50 பேர் கைது
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் வீடுகளை முற்றுகையிட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர். #ministersellurraju #ministerudayakumar
மதுரை:
சீர்மரபினரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கள்ளர் சீரமைப்பு சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
அதன்படி இன்று காலை கள்ளர் சீரமைப்பு சங்க மாவட்ட நிர்வாகி சகாதேவன் தலைமையில் 7 பெண்கள் உள்பட 20 பேர், அண்ணாநகர் செண்பக தோட்டம் பகுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டை முற்றுகையிட புறப்பட்டனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று நடுவழியிலேயே அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் மதுரை செல்லூரில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட சென்ற 30 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். #ministersellurraju #ministerudayakumar