திருவாரூர்-திருக்குவளையில் கருணாநிதி படத்துக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
திருவாரூர்:
திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த திமுக தலைவர் கலைஞர் திருவுரு படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, உயதநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, மதிவாணன், மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக திருச்சியில் இருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் திருக்குவளை வருகை தந்தார். திருக்குவளையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் பட்த்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் வருகை தந்த கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திருவாரூர் புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். திருவாரூர் வீட்டிலும் கருணாநிதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டிலேயே சிறிதுநேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை கார் மூலம் திருச்சி புறப்பட்டார். #karunanidhideath #mkstalin