செய்திகள்
முத்துச்சாமி

கோவையில் கருணாநிதி இறந்த துக்கத்தில் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-08-11 07:37 GMT   |   Update On 2018-08-11 07:37 GMT
கருணாநிதி இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை கணபதி பாரதி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). தி.மு.க. தொண்டர். மேலும் தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாரதி நகரில் சாலை ஓரம் வி‌ஷம் குடித்த நிலையில் முத்துச்சாமி மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். முத்துச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி முத்துச்சாமி இறந்தார்.

அவர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது பெயர், அவரது மகன் பெயர், செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News