செய்திகள்

கருணாநிதி மரணம்- செய்யாறு தி.மு.க. பெண் தொண்டர் அதிர்ச்சியில் மரணம்

Published On 2018-08-08 06:07 GMT   |   Update On 2018-08-08 06:07 GMT
கருணாநிதி உடல்நலக்குறைவால் மரண மடைந்த செய்தியை நேற்று இரவு செய்யாறு தி.மு.க. பெண் தொண்டர் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புளிரம்பாக்கத்தை சேர்ந்தவர் தங்கராஜ் என்கிற பீட்டர். இவரது மனைவி சுசிலா (வயது 60). அங்கன்வாடி பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சுசிலா, தி.மு.க.வின் நீண்ட கால உறுப்பினராகவும், கருணாநிதியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார்.இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மரண மடைந்த செய்தியை நேற்று இரவு தெரிந்து கொண்ட சுசிலா அதிர்ச்சியில் துக்கம் தாளாமல் கதறி அழுதார்.

விடிய விடிய டி.வி. முன்பு உட்கார்ந்துக் கொண்டு கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுசிலா இறந்தார். 

Tags:    

Similar News