செய்திகள்
சொத்து குவிப்பு வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்
சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பொன்முடி வழக்கின் விசாரணை வரும் 31-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
விழுப்புரம்:
முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பொன்முடி இன்று கோர்ட்டில் ஆஜராகினார். அதன்பின்பு வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் மணல் அள்ளியதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் உள்பட 8 பேர் மீது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் இன்று இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கோர்ட்டில் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிரியா இந்த வழக்கையும் 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பொன்முடி இன்று கோர்ட்டில் ஆஜராகினார். அதன்பின்பு வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் மணல் அள்ளியதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் உள்பட 8 பேர் மீது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் இன்று இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கோர்ட்டில் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிரியா இந்த வழக்கையும் 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.