செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி எம்.எல்.ஏ.க்கள் பயன் பெறுகிறார்கள்- தினகரன் குற்றச்சாட்டு
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி எம்.எல்.ஏ.க்கள் பயன்பெறுவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதைத்தான் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பார்த்தேன்.
அம்மாவை மறந்து விட்டு, பழனிசாமி ஏதோ பரம்பரையாக முதல்-அமைச்சராக இருப்பது போல புகழ்பாடுகிறார்கள். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் சொந்த நலனுக்காக அரசு பணம் வாரி இறைக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது தான் உண்மை.
நிதியே இல்லை. 110-வது விதியின் கீழ் புதிதாக அறிவிக்கப்படும் எல்லாவற்றையும் பழனிசாமியால் நிறைவேற்ற முடியாது. இது அவருக்கு தெரியும்.
இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இருக்கிறவரை அறிவிப்போம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி செய்கிறார். வர இருக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதைத்தான் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பார்த்தேன்.
அம்மாவை மறந்து விட்டு, பழனிசாமி ஏதோ பரம்பரையாக முதல்-அமைச்சராக இருப்பது போல புகழ்பாடுகிறார்கள். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் சொந்த நலனுக்காக அரசு பணம் வாரி இறைக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது தான் உண்மை.
நிதியே இல்லை. 110-வது விதியின் கீழ் புதிதாக அறிவிக்கப்படும் எல்லாவற்றையும் பழனிசாமியால் நிறைவேற்ற முடியாது. இது அவருக்கு தெரியும்.
இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இருக்கிறவரை அறிவிப்போம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி செய்கிறார். வர இருக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran