செய்திகள்

விருதுநகரில் மாற்றுத்திறனாளி மகனை கொன்று தந்தை தற்கொலை

Published On 2018-07-06 10:07 IST   |   Update On 2018-07-06 10:07:00 IST
விருதுநகரில் மாற்றுத்திறனாளி மகனை நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்:

விருதுநகர் பாண்டியன் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 53). அதே பகுதியில் தச்சுப்பட்டறை நடத்தி வருகிறார்.

இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், செல்வ வேந்திரன் (27), சுரேஷ் கண்ணன் (25), ராகுல் (21) என 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் 2 மகன்கள் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.

3-வது மகனான ராகுல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். மேலும் வாய் பேசவும் முடியாது. இதனால் ராகுலை வீட்டில் வைத்து பெற்றோர் பராமரித்து வந்தனர்.

மாற்றுத்திறனாளி மகனை நினைத்து முருகன் வேதனையில் இருந்தார். ராகுல் மேல் மிகவும் பாசம் வைத்திருந்த முருகன் பெரும்பாலான நேரம் அவருடனேயே இருப்பார்.

இந்த நிலையில் மகன் துன்பப்படுவதை பொறுக்க முடியாத முருகன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ராகுலை தூக்கிக் கொண்டு, வீட்டின் முன்புள்ள 7 அடி தண்ணீர் தொட்டியில் போட்டு மூழ்கடித்தார். இதில் ராகுல் மூச்சுத்திணறி சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் மகனை கொலை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் எழுந்த பாக்கியலட்சுமி, கணவர் தூக்கிலும், மகன் தண்ணீர் தொட்டியிலும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்த பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகனை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News