செய்திகள்

சட்டசபையில் பேச எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி கேட்ட கருணாஸ்

Published On 2018-07-02 13:45 IST   |   Update On 2018-07-02 13:45:00 IST
தமிழக சட்டசபைக்கு இன்று வந்த கருணாஸ் முதல்-அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டார்.
சென்னை:

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சமீப காலமாக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வந்தார். தி.மு.க. நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூவத்தூர் பேரம் பற்றி எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

அவரது இந்த நிலையால் சட்டசபையில் பேச முன்பு போல் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் சபாநாயகரிடம் முறையிட்டபோது அரசு கொறடாவை சந்திக்குமாறு கூறினார்.

என்றாலும் அவருக்கு சட்டசபையில் பேச அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த கருணாஸ் முதல்- அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று மெதுவாக கேட்டார். அதற்கு முதல்- அமைச்சர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.

பின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வரலாற்று பாடப்புத்தகத்தில் பசும்பொன்தேவர் வரலாறு நீக்கம் பற்றி விளக்கம் கேட்டு சட்டசபையில் பேசவே அனுமதி கேட்டேன் என்றார். இந்த பிரச்சனைக்கு ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில் மீண்டும் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TNAssembly #Karunas
Tags:    

Similar News