ரஜினியும்-கமலும் மக்களுக்கு நல்லது செய்வார்கள்: நடிகை நமீதா சொல்கிறார்
ஈரோடு:
தமிழ் பட உலகில் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை நமீதா. தற்போது இவர் படங்களில் நடிக்கா விட்டாலும் தனது கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் நடிகை நமீதா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இப்பவும் தமிழக ரசிகர்கள் மத்தியில் எனக்கு என்று ஒருவரவேற்பு உள்ளது. தமிழக ரசிகர்கள் என்னை மறக்க மாட்டார்கள். நானும் மறக்க மாட்டேன்.
அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க...அதுபற்றி சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அரசியல் சூழ்நிலை இப்போது தமிழகத்தில் சரியில்லை என்றுதான் நான் கருதுகிறேன்.
அதே சமயம் ரஜினியும்- கமலஹாசனும் மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியல்கட்சி தொடங்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக அவங்க 2 பேரும் நல்லதை செய்வாங்க... நான் நம்புகிறேன்.
தமிழ்பட உலகில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். இப்போதைக்கு வேறுமொழிபடங்களில் நடிக்கவில்லை.
இவ்வாறு நடிகை நமீதா கூறினார். #rajinikanth #kamal #actressnamitha