செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே இன்று காலை அரசு பஸ் சக்கரம் ஏறி பள்ளி மாணவி உயிரிழப்பு

Published On 2018-06-22 06:37 GMT   |   Update On 2018-06-22 06:37 GMT
நெல்லிக்குப்பம் அருகே இன்று காலை அரசு பஸ்சின் முன்பக்க வாசலின் வழியாக தவறி விழுந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பலப்பட்டு காலனியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவருடைய மகள் தனலட்சுமி (வயது 16 ) இவர் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை தனலட்சுமி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக பலப்பட்டில் இருந்து சி.என்.பாளையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினாள். பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க வாசலின் வழியாக திடீரென்று தனலட்சுமி தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் எதிர்பாராதவிதமாக தனலட்சுமி மீது ஏறி இறங்கியது. இதில் தனலட்சுமி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News