செய்திகள்

நிர்மலாதேவி விவகாரம் - முருகன், கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2018-06-05 13:33 IST   |   Update On 2018-06-05 13:33:00 IST
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
விருதுநகர்:

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.



இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி முத்து சாரதா விசாரணை நடத்தி 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.#NirmalaDevi #Karuppasamy #Murugan

Tags:    

Similar News