செய்திகள்

கயத்தாறு அருகே சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி

Published On 2018-05-29 05:41 GMT   |   Update On 2018-05-29 05:41 GMT
கயத்தாறு அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கயத்தார்:

பாளை கே.டி.சிநகரை சேர்ந்தவர் பால சரவணன் (வயது22). என்ஜினீயரான இவர் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் வசித்து வந்தார். இவரது நண்பருக்கு நேற்று சிவகாசியில் திருமணம் நடைபெற்றது. இதற்காக பால சரவணன் தனது நண்பர் சென்னையை சேர்ந்த சரத் (22) என்பவருடன் சிவகாசிக்கு வந்தார்.

திருமண விழாவில் கலந்து கொண்ட அவர்கள் இன்று காலை நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடிக்கு வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் பாலசரவணன், சரத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

சிறிது நேரத்தில் பால சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சரத் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுபற்றி கயத்தாறு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ஆதமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த சரத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான பாலசரவணன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News