செய்திகள்

திருப்பூர் பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-05-28 10:07 GMT   |   Update On 2018-05-28 10:07 GMT
திருப்பூரில் சிலை அலங்காரத்தை மாற்றியதால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் 15.வேலம் பாளையம் சோலி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். பனியன் தொழிலாளி. இவரது மகன் நவீன்குமார் (வயது 15). அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நவீன்குமார் சிகை அலங்காரத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். தலை முடியை ஸ்டைலாக அடிக்கடி மாற்றி வந்தார். கோடை விடுமுறையையொட்டி தற்போது புதிய ஸ்டைலில் முடி வெட்டி இருந்தார். இதை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.

வரும் 1-ந்தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட உள்ளது. வித்தியாசமாக முடிவெட்டி இருப்பதால் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். முடியை அழகாக வெட்டிக்கொள் என்று தந்தை கூறி வந்தார். ஆனால் மகன் மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மகனை கட்டாயமாக சலூன் கடைக்கு அழைத்துச்சென்று முடியை பள்ளிக்கு செல்லும் அளவுக்கு வெட்டுமாறு கூறினார். கடைக்காரரும் அப்படியே வெட்டினார். தனக்கு பிடித்த ஸ்டைலில் வைத்திருந்த முடி போய்விட்டதே என்று மாணவர் நவீன்குமார் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News