செய்திகள்

தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவீன வசதியுடன் சிறப்பு ரெயில்

Published On 2018-04-14 17:05 IST   |   Update On 2018-04-14 17:05:00 IST
தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடை கால சிறப்பு ரெயில் இன்று இயக்கப்பட்டது. #specialtrain

தாம்பரம்:

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடை கால சிறப்பு ரெயில் இன்று இயக்கப்பட்டது. இந்த அந்தோதியா ரெயிலில் சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டிகள் தொழிற்சாலையில் தயாரான எச்.எல்.பி. எனும் அதிநவீன சிறப்பு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெட்டியில் 100 இருக்கைகள், எல்.ஈ..டி விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன பயோ டாய்லெட், செல்போன் சார்ஜ் செய்ய வசதி, ஒரு பெட்டியில் ஏறினால் ரெயில் முழுவதும் இடம் மாறி அமரும் விதமாக பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயிலில் ரூ. 200-க்கு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லலாம். வரவேற்பை பொருத்து தொடர்ச்சியாக சேவை அளிக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் இன்று அதிகாலை 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டது.

செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடு துறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுகல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய வழித் தடத்தில் நின்று மாலை 5.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறு மார்க்கத்தில் அதே ரெயில் நிலையங்களில் நின்று திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

கடந்த ஒருமாதம் முன்பாக இதேபோல் அந்தியோதையா ரெயில் பெட்டிகளை இணைத்து தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு 200 ரூபாயில் செல்லும் பகல் நேர ரெயில் இயக்கப்பட்டது.

ஆனால் இரண்டு சர்வீஸ் மட்டுமே சென்று திரும்பிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. #tamilnews #specialtrain

Similar News