செய்திகள்
பண்ருட்டியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: பலகோடி சேதம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஜவுளிக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ்நிலையம் பின்புறம் இந்திராகாந்தி சாலையில் பாலாஜி சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடை 3 மாடிகளை கொண்டதாகும். இதன் உரிமையாளர் கே.வி.ஆர். மோகன், பிரபல தொழில் அதிபர்.
இந்த ஜவுளிக்கடையில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று இரவு 10 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். காவலாளி மட்டும் பணியில் இருந்தார்.
இரவு 11 மணி அளவில் திடீர் என்று ஜவுளிக்கடையில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த காவலாளி உடனடியாக கடையின் உரிமையாளர் மோகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே மோகன் ஜவுளிக்கடைக்கு விரைந்து சென்றார். அங்கு கடை தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென கடைமுழுவதும் பரவ தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்லமுடியாமல் வெளியில் நின்ற படியே தண்ணீரை பீய்ச்சு அடித்தனர்.
நேரம் செல்ல செல்ல தீ அதிகமாக பரவியதால் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பண்ருட்டி போலீசார், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஜவுளிக்கடையின் ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜவுளிக்கடையின் கண்ணாடிகள் வெப்பம் அதிகமானதால் வெடித்து சிதறியது. மேலும் ஏ.சி.மெஷின்களும் வெடித்து சிதறின.
இந்த நிலையில் இரவு 1 மணி அளவில் ஜவுளிகடையின் 3-வது மாடி வெப்பம் தாங்கமுடியாமல் டமார் என இடிந்து விழுந்தது. சுவர்கள் தொடர்ந்து இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஜவுளிகடையில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இரவு 11 மணிக்கு பிடித்த தீ இன்று காலை 8 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த தீவிபத்தில் ஜவுளிக் கடையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து இரவில் ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. பகலில் தீப்பிடித்திருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. #Tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ்நிலையம் பின்புறம் இந்திராகாந்தி சாலையில் பாலாஜி சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடை 3 மாடிகளை கொண்டதாகும். இதன் உரிமையாளர் கே.வி.ஆர். மோகன், பிரபல தொழில் அதிபர்.
இந்த ஜவுளிக்கடையில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று இரவு 10 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். காவலாளி மட்டும் பணியில் இருந்தார்.
இரவு 11 மணி அளவில் திடீர் என்று ஜவுளிக்கடையில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த காவலாளி உடனடியாக கடையின் உரிமையாளர் மோகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே மோகன் ஜவுளிக்கடைக்கு விரைந்து சென்றார். அங்கு கடை தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென கடைமுழுவதும் பரவ தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்லமுடியாமல் வெளியில் நின்ற படியே தண்ணீரை பீய்ச்சு அடித்தனர்.
ஜவுளிகடை முன்பு திரண்ட பொதுமக்கள்.
நேரம் செல்ல செல்ல தீ அதிகமாக பரவியதால் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பண்ருட்டி போலீசார், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஜவுளிக்கடையின் ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜவுளிக்கடையின் கண்ணாடிகள் வெப்பம் அதிகமானதால் வெடித்து சிதறியது. மேலும் ஏ.சி.மெஷின்களும் வெடித்து சிதறின.
இந்த நிலையில் இரவு 1 மணி அளவில் ஜவுளிகடையின் 3-வது மாடி வெப்பம் தாங்கமுடியாமல் டமார் என இடிந்து விழுந்தது. சுவர்கள் தொடர்ந்து இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஜவுளிகடையில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இரவு 11 மணிக்கு பிடித்த தீ இன்று காலை 8 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த தீவிபத்தில் ஜவுளிக் கடையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து இரவில் ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. பகலில் தீப்பிடித்திருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. #Tamilnews