செய்திகள்
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த வாலிபர்கள்.

ரெயில்வே தண்டவாளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த வடமாநில வாலிபர்கள்

Published On 2017-12-19 08:21 GMT   |   Update On 2017-12-19 08:21 GMT
புதுக்கோட்டை அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரெயில்வே தண்டவாளத்தில் வட மாநில வாலிபர்கள் 2 பேர் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே இன்று காலை 2 வாலிபர்கள் கழுத்தில் ரத்தக் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொது மக்கள் உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 வாலிபர்களின் கழுத்து பகுதி பிளேடால் அறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது.

ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கி நிலையில் கிடந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த வாலிபர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. அவர்களது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

புதுக்கோட்டை பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்த அவர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமா? அல்லது ஏதாவது பிரச்சினை காரணமாக மர்ம நபர்கள் அவர்களது கழுத்தை அறுத்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Tags:    

Similar News