செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விவசாயி பலி

Published On 2017-11-08 14:16 IST   |   Update On 2017-11-08 14:16:00 IST
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விவசாயி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றத்தை அடுத்த கோரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 75) விவசாயி. கடந்த 4-ந் தேதி அவர் வீட்டில் தூங்கினார்.

அப்போது பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து கன்னியப்பன் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கன்னியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.


Similar News