செய்திகள்

மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகள் அகற்றம்

Published On 2017-11-07 08:20 GMT   |   Update On 2017-11-07 08:20 GMT
மாமல்லபுரம், தேவநேரி, பூஞ்சேரி பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த இறால் பண்ணைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
மாமல்லபுரம்:

கனமழை காரணமாக மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாமல்லபுரம், தேவநேரி, பூஞ்சேரி பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட இறால் பண்ணைகளால் வெள்ளம் வேகமாக செல்வது தடைபட்டு அருகே உள்ள குடியிறுப்பு பகுதி மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி குப்பை கிடங்கின் உள்ளே புகுந்தது. இதனால் வெள்ள அபாயமும் தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டது.

இதையறிந்த மழை வெள்ள கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா கால்வாயை பார்வையிட்டு உடனடியாக இறால் பண்ணைகளை அகற்றும்படி மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகளை அதிகாரிகள் அகற்றினர். கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த மாமல்லபும் நகர அ.தி.மு.க முக்கிய பிரமுகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News