செய்திகள்
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவுக்கு சென்ற திருநாவுக்கரசர்-டி.டி.வி.தினகரன் மீது வழக்கு
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவுக்கு போலீஸ் உத்தரவை மீறி வாகனங்களில் கூடுதல் ஆட்களுடன் வந்ததாக திருநாவுக்கரசர், டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மருதுபாண்டியர்கள் குரு பூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சி தலைவர்கள் வாகனங்களுடன் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் 5 பேர் மட்டுமே வரவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார்.
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், கருணாஸ் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் கண்ணன், ஸ்ரீதர் வாண்டையார், நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் சகாயம் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அப்போது அவர்களுடன் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததாகவும், அதில் 5-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் அவர்கள் மீது போலீஸ் உத்தரவை மீறி வாகனங்களில் கூடுதல் ஆட்களுடன் வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மருதுபாண்டியர்கள் குரு பூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சி தலைவர்கள் வாகனங்களுடன் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் 5 பேர் மட்டுமே வரவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார்.
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், கருணாஸ் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் கண்ணன், ஸ்ரீதர் வாண்டையார், நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் சகாயம் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அப்போது அவர்களுடன் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததாகவும், அதில் 5-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் அவர்கள் மீது போலீஸ் உத்தரவை மீறி வாகனங்களில் கூடுதல் ஆட்களுடன் வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.