செய்திகள்
நெய்வேலி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம கடிதத்தால் பொதுமக்கள் பீதி
நெய்வேலி ரெயில்வே நிலையத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம கடிதத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக காரைக்காலில் இருந்து பெங்களூர் வரை செல்லும் ரெயிலும், கடலூரிலிருந்து திருச்சி வரை செல்லும் ரெயிலும் தினசரி இயக்கப்படுகிறது.
மேலும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு நிலக்கரி ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயிலும் மந்தாரக்குப்பம் ரெயில் நிலையத்தின் வழியாகத் தான் செல்கிறது.
இந்தநிலையில் மந்தாரக்குப்பம் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு நேற்று மாலை ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அந்த கடிதத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த மீனாட்சிப்பேட்டை கேசவன் என்பவர் எழுதியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எனது தந்தைக்கும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
கடந்த 24-ந்தேதி இருவரும் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ரெயில் பாதையில் 4, 5 இடங்களில் வெடிகுண்டுகளை ஒரு அட்டை பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
வருகிற டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சிதம்பரம் ரெயில்வே கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மந்தாரக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி அதை சுற்றியுள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் நெய்வேலி ரெயில் நிலையத்தில் உள்ள 2 லெவல் கிராசிங்களிலும், நிலக்கரி சேமிப்பு கிடங்குகளிலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில்வே நிலையத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம கடிதத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக காரைக்காலில் இருந்து பெங்களூர் வரை செல்லும் ரெயிலும், கடலூரிலிருந்து திருச்சி வரை செல்லும் ரெயிலும் தினசரி இயக்கப்படுகிறது.
மேலும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு நிலக்கரி ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயிலும் மந்தாரக்குப்பம் ரெயில் நிலையத்தின் வழியாகத் தான் செல்கிறது.
இந்தநிலையில் மந்தாரக்குப்பம் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு நேற்று மாலை ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அந்த கடிதத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த மீனாட்சிப்பேட்டை கேசவன் என்பவர் எழுதியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எனது தந்தைக்கும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
கடந்த 24-ந்தேதி இருவரும் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ரெயில் பாதையில் 4, 5 இடங்களில் வெடிகுண்டுகளை ஒரு அட்டை பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
வருகிற டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சிதம்பரம் ரெயில்வே கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மந்தாரக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி அதை சுற்றியுள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் நெய்வேலி ரெயில் நிலையத்தில் உள்ள 2 லெவல் கிராசிங்களிலும், நிலக்கரி சேமிப்பு கிடங்குகளிலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில்வே நிலையத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம கடிதத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.