செய்திகள்

கடலூர் சில்வர்பீச்சில் கடல் உள்வாங்கியது: பொதுமக்கள் பீதி

Published On 2017-10-27 17:14 IST   |   Update On 2017-10-27 17:14:00 IST
கடலூர் சில்வச்பீச்சில் கடல் திடீரென 40 அடி தூரத்துக்கு உள் வாங்கியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர்பீச் கடலில் சுனாமிக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென கடல் உள்வாங்குவதும், சீற்றமாக காணப்படுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் சில்வச்பீச்சில் கடல் திடீரென 40 அடி தூரத்துக்கு உள் வாங்கியது. இன்று காலையும் அதே நிலை நீடித்தது.

இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பீதியடைந்தனர். கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடல் உள்ளே யாரையும் அனுமதிக்க வில்லை.

இது குறித்து மீனவர்கள் கூறும்போது, “சில்வர்பீச் கடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சரியான காரணத்தை கண்டறிந்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

Similar News