செய்திகள்

சிதம்பரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

Published On 2017-10-16 10:30 GMT   |   Update On 2017-10-16 10:31 GMT
நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவசக்தி நகர் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர்.

இவர் இன்று அதிகாலை சிதம்பரம் கூத்தன்கோவிலில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அவர் சிதம்பரம் புற வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம மனிதர்கள் வழிமறித்தனர்.

பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இது பற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழனிசாமியை கொலை செய்த மர்ம மனிதர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக பழனிசாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோத காரணத்தால் மர்ம மனிதர்கள் அவரை கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News