செய்திகள்

சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதி பெயர் மீண்டும் இடம் பெற வேண்டும்: சரத்குமார்

Published On 2017-10-10 15:26 IST   |   Update On 2017-10-10 15:26:00 IST
சிவாஜி மணி மண்டபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மருத்துவர்கள் அவசர கால நிலைமை கருதி விடுப்பு எடுக்காமல் மக்கள் பணியாற்ற வேண்டும்.

மேலும் மக்களும் ஒருங்கிணைந்து டெங்குவை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

சிவாஜி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலையில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டினை அரசியல் நாகரிகம் கருதி மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.

சினிமாவிற்கு அரசு விதித்துள்ள கேளிக்கை வரியினால் சினிமா தொழில் பாதிக்கப்படும். இதனால் திருட்டு வி.சி.டி. அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து கேளிக்கை வரியினை திரும்பப் பெற வேண்டும்.

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி சிந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News