செய்திகள்

கோடியக்கரை அருகே வேதாரண்யம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை மீனவர்கள்

Published On 2017-09-24 07:57 GMT   |   Update On 2017-09-24 07:57 GMT
கோடியக்கரை அருகே மீன் பிடித்த வேதாரண்யம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் வலைகளை பறித்து விரட்டியடித்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மயில் வாகனன். இவருக்கு சொந்தமான படகில் மயில்வாகனன் உள்பட 4 பேர்  நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை விரட்டி யடித்தனர்.

மேலும் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் விரித்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வலைகளையும் பறித்து கொண்டனர். இலங்கை மீனவர்களிடம் வலைகளை பறிகொடுத்த மீனவர்கள் இன்று காலை வெறுங்கையுடன் கரைக்கு திரும்பினர்.
இது குறித்து அவர்கள் கடலோர காவல் படையினரிடம் புகார் அளித்தனர்.

நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த  ஆறுகாட்டுதுறை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்த சம்பவம் நடைபெற்றது. தற்போது அதே பகுதி மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டி அடித்து உள்ளனர். இலங்கை கடற்படை, மீனவர்கள் செயலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடியக்கரை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                                                                                                                                                                                                                                                                                     
Tags:    

Similar News