செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட காரை படத்தில் காணலாம்.

வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2017-09-13 07:00 GMT   |   Update On 2017-09-13 07:00 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில் அதிகாரிகள் காரைக்கால் மார்க் துறைமுகம் அருகே உள்ள சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 10 கிலோ தங்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர். காரும் கைப்பற்றப்பட்டது.

இதனை வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடியை சேர்ந்த மகாலிங்கம், டிரைவர் உள்பட 2 பேர் கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களை அதிகாரிகள் நாகை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த தங்கம் விழுந்தமாவடியில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்து கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News