செய்திகள்
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டல்கள், மருந்து கடைகள் மூடப்பட்டன
சேவை வரி உயர்வு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டல்கள், மருந்து இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
காஞ்சீபுரம்:
‘ஆன்லைன்’ மருந்துகள் விற்பனை அனுமதியை கண்டித்து தமிழகத்தில் மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள் மூடப்பட்டன. காஞ்சீபுரம் நகரில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மருந்து கடை வாசல்களில் மாலை 6 மணிக்கு கடை திறக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. தனியார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இதே போல் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 900 மருந்து கடைகள் உள்ளன. அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அனைத்து கடைகள் முன்பும் கடை அடைப்பு பற்றிய ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருந்தது. ஊத்துக்கோட்டை, திருத்தணி, பெரியபாளையம், ஆவடி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மருந்து கடைகள் மூடப்பட்டு இருந்தன.
இது பற்றி திருவள்ளூர் மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட செயலாளர் நரசிம்மன் கூறியதாவது:-
மத்திய அரசு ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்துக்கு அனுமதி தரப் போவதாக தெரிவித்துள்ளது. இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 900 மருந்து கடைகள் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு நடைபெறுகிறது.
ஆன்லைன் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை திட்டத்தால் உயிர் காக்கும் மருந்துகள் பெறுவதில் சிரமம் ஏற்படும்.மேலும் ஊக்கமருந்து, தூக்க மருந்து, போதை மருந்து, கருத்தடை மாத்திரைகள் ஆகியவை தாராளமாக கிடைக்கும். இது கலாசார சீரழிவை ஏற்படுத்துவதுடன் உயிர் இழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே மத்திய அரசின் முடிவை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மூடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் மத்திய அரசின் சேவை வரி உயர்வை கண்டித்து இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. காந்தி சாலை, காமராஜர் வீதி, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் அதிகளவில் உணவகங்கள் உள்ளன. அனைத்து கடைகளுமே இன்று செயல்படவில்லை.
இதனால் ஆங்காங்கே தெரு பகுதிகளில் சிறு சிற்றுண்டி கடைகளிலும், சாலையோர உணவகங்களிலும் அதிகளவில் கூட்டம் மொய்த்தது. வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் உள்ளூர் மக்களிடம் எங்கேனும் சிற்றுண்டி கிடைக்குமா என கேட்டு சாப்பிட்டு சென்றனர்.
காஞ்சீபுரத்துக்கு சுற்றுலா வந்து இருந்தவர்களும், பட்டுச்சேலை வாங்க வந்திருந்த மொத்த வியாபாரிகளும் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தது. சாலையோர உணவு கடைகள், டீ கடைகள் திறந்து இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மூடப்பட்டன.
‘ஆன்லைன்’ மருந்துகள் விற்பனை அனுமதியை கண்டித்து தமிழகத்தில் மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள் மூடப்பட்டன. காஞ்சீபுரம் நகரில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மருந்து கடை வாசல்களில் மாலை 6 மணிக்கு கடை திறக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. தனியார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இதே போல் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 900 மருந்து கடைகள் உள்ளன. அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அனைத்து கடைகள் முன்பும் கடை அடைப்பு பற்றிய ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருந்தது. ஊத்துக்கோட்டை, திருத்தணி, பெரியபாளையம், ஆவடி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மருந்து கடைகள் மூடப்பட்டு இருந்தன.
இது பற்றி திருவள்ளூர் மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட செயலாளர் நரசிம்மன் கூறியதாவது:-
மத்திய அரசு ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்துக்கு அனுமதி தரப் போவதாக தெரிவித்துள்ளது. இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 900 மருந்து கடைகள் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு நடைபெறுகிறது.
ஆன்லைன் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை திட்டத்தால் உயிர் காக்கும் மருந்துகள் பெறுவதில் சிரமம் ஏற்படும்.மேலும் ஊக்கமருந்து, தூக்க மருந்து, போதை மருந்து, கருத்தடை மாத்திரைகள் ஆகியவை தாராளமாக கிடைக்கும். இது கலாசார சீரழிவை ஏற்படுத்துவதுடன் உயிர் இழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே மத்திய அரசின் முடிவை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மூடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் மத்திய அரசின் சேவை வரி உயர்வை கண்டித்து இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. காந்தி சாலை, காமராஜர் வீதி, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் அதிகளவில் உணவகங்கள் உள்ளன. அனைத்து கடைகளுமே இன்று செயல்படவில்லை.
இதனால் ஆங்காங்கே தெரு பகுதிகளில் சிறு சிற்றுண்டி கடைகளிலும், சாலையோர உணவகங்களிலும் அதிகளவில் கூட்டம் மொய்த்தது. வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் உள்ளூர் மக்களிடம் எங்கேனும் சிற்றுண்டி கிடைக்குமா என கேட்டு சாப்பிட்டு சென்றனர்.
காஞ்சீபுரத்துக்கு சுற்றுலா வந்து இருந்தவர்களும், பட்டுச்சேலை வாங்க வந்திருந்த மொத்த வியாபாரிகளும் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தது. சாலையோர உணவு கடைகள், டீ கடைகள் திறந்து இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மூடப்பட்டன.