செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 46-வது நாளாக போராட்டம் நீடிப்பு

Published On 2017-05-27 09:43 IST   |   Update On 2017-05-27 09:46:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று 46-வது நாளாக போராட்டம் நடக்கிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று 46-வது நாளாக போராட்டம் நடக்கிறது.


ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உருவபொம்மையை கட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சிறுவர்கள்.

நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உருவபொம்மையை கட்டையால் அடித்து, கிராமத்தின் எல்லையில் கொண்டுபோய் வீசினர். இந்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News