செய்திகள்

கார்த்தி சிதம்பரம் ‘திடீர்’ லண்டன் பயணம்

Published On 2017-05-18 10:51 IST   |   Update On 2017-05-18 10:51:00 IST
முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென இன்று காலை 6 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.

ஆலந்தூர்:

தனியார் டி.வி.க்கு அன்னிய முதலீடு பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகத்தில் நேற்று முன் தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

கார்த்தி சிதம்பரத்திடம் பல்வேறு ஆவணங்களை காட்டி விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து இருந்தனர். மேலும் கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சீலிட்டு எடுத்து சென்றனர்.


இந்த நிலையில் இன்று காலை கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானத்தில் அவர் சென்றார்.

Similar News