செய்திகள்
டி.டி.வி.தினகரன் கைதில் பா.ஜனதா பின்னணி இல்லை: நிர்மலா சீதாராமன்
டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. இரு அணிகளையும் கட்டுப்படுத்தி பா.ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பது சரியானது அல்ல.
மோடியின் நலத்திட்டங்களால் பா.ஜனதாவை மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க.வின் இரு அணிகளால் தான் பா.ஜனதா காலூன்றுகிறது என்பது தவறு. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை.
டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதில் பா.ஜனதாவின் தலையீடு எங்கு இருக்கிறது. எல்லாவற்றிலும் பா.ஜனதாவையும், மோடியையும் குறை சொல்வது வழக்கமாகவே இருக்கிறது.
கொடநாட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு. இந்த வழக்கில் மாநில அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. இரு அணிகளையும் கட்டுப்படுத்தி பா.ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பது சரியானது அல்ல.
மோடியின் நலத்திட்டங்களால் பா.ஜனதாவை மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க.வின் இரு அணிகளால் தான் பா.ஜனதா காலூன்றுகிறது என்பது தவறு. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை.
டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதில் பா.ஜனதாவின் தலையீடு எங்கு இருக்கிறது. எல்லாவற்றிலும் பா.ஜனதாவையும், மோடியையும் குறை சொல்வது வழக்கமாகவே இருக்கிறது.
கொடநாட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு. இந்த வழக்கில் மாநில அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.